Tag: immigration update
பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய Immigration and Asylum Bill 2026 தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த மசோதாவின்படி மனிதக் கடத்தல் அல்லது நவீன அடிமைத்தனத்திற்கு ஆளானவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாக தாமதமாக தெரிவித்தால் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சில சட்டப் பாதுகாப்புகள் மற்றும் உதவிகள் மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையான பாதிக்கப்பட்டவர்களே பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக அமைப்புகள் எச்சரிக்கின்றன. மேலும், புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் குழந்தைகள் உட்பட […]
UK Immigration Rules 2026 தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) புதிய HC 259 Statement of Changes-ஐ வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் குடும்ப விசா குழந்தைகளின் Settlement Graduate Visa Immigration Bail உள்ளிட்ட பல குடியேற்ற விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாற்றங்கள் 2026 ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 3 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்களின் முக்கிய அம்சங்களில் பிரித்தானியாவில் பிறந்த Graduate Visa வைத்திருப்போரின் குழந்தைகள் இனி […]
டென்மார்க் குடியுரிமை – கிரீன்லாந்து நுழைவில் புதிய மாற்றம். 2026 மார்ச் 20 அன்று வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின் படி ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஐரோப்பிய பொருளாதார பகுதி (EEA) அல்லது ஸ்விட்சர்லாந்து அல்லாத நாடுகளைச் சேர்ந்த third-country nationals (மூன்றாம் நாடு குடிமக்கள்) இனி Faroe Islands மற்றும் Greenland பகுதிகளுக்குள் நுழைவதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் மூலம் டென்மார்க் குடியுரிமை அல்லது வசிப்புரிமை வைத்திருக்கும் சில வெளிநாட்டு குடிமக்களுக்கு […]
சவுதி அபராதமின்றி வெளியேறுதல் – விசாக்களை 18 ஏப்ரல் 2026 வரை நீடித்துக் கொள்ள முடியும். ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் சமீபத்திய பிராந்திய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட சலுகைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை 25.02.2026 அன்று அல்லது அதற்குப் பின்னர் தமது விசா காலம் காலாவதியான இலங்கை பிரஜைகளுக்கு பொருந்தும். குறிப்பாக, சவுதி அபராதமின்றி வெளியேறுதல் மூலமாக விசிட் விசா (Visit Visas), உம்ரா விசா, […]
ஈஸ்டர் விடுமுறையில் – ஐரோப்பா செல்லும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு புதிய எல்லைச் சோதனை. ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் பிரிட்டிஷ் குடிமக்களுக்கு புதிய Entry/Exit System (EES) எனப்படும் டிஜிட்டல் எல்லைச் சோதனை நடைமுறை குறித்து பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஈஸ்டர் விடுமுறையில் புதிய முறை பழைய பாஸ்போர்ட் முத்திரை முறையை மாற்றி பயணிகளின் வருகை மற்றும் வெளியேறும் தகவல்களை மின்னணு முறையில் பதிவு செய்யும். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் […]