Tag: Mass Grave
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 30ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) நடைபெற்ற நிலையில் மேலும் 07 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 377 எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அகழாய்வு பணிகளின் மூலம் மேலும் பல […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் இரண்டாம் பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் காணப்பட்ட மனித என்புக்கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கிய இந்த அகழ்வு நடவடிக்கைகள் மே 9ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்ற பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட அகழ்வின் போது குறித்த என்புக்கூடு கண்டறியப்பட்டது. அதேவேளை புதைகுழி பகுதியில் செத்தல் […]
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8ஆம் நாளான இன்று (05) குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வின் போது தங்கம் என சந்தேகிக்கப்படும் சிறிய ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆய்வில் மொத்தம் ஐந்து எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டவற்றில் இருந்து ஒரு குழந்தையின் எலும்புக்கூடும் மற்றொரு மனித எலும்புக்கூடும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி […]