Tag: Medical News
Sri Lanka News,இலங்கையில் வாய்ப்புற்றுநோயால் தினமும் சராசரியாக மூவர் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனுஜா தக்ஷிணி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் ஆண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாக வாய்ப்புற்றுநோய் இருப்பதுடன் பெண்களிடையிலும் அதிகமாகக் காணப்படும் முதல் பத்து புற்றுநோய்களில் ஒன்றாக இது உள்ளதாக கூறினார். புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல், சிகரெட் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவை வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய […]
இலங்கையில் ஆண்டுதோறும் எச்.ஐ.வி. (HIV) தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக விசேட நிபுணர் வைத்தியர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் 2023 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தரவுகளை ஆய்வு செய்தபோது புதிய எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக அதிக மக்கள் தொகை […]
நோர்வே இளவரசி சிகிச்சை வெற்றி பெற்றதாக அரண்மனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீண்டகால உடல்நலக் குறைபாடால் பாதிக்கப்பட்டிருந்த கிரௌன் இளவரசி தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மேலும் அவரது உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவின் தகவலின்படி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை எந்த பெரிய சிக்கல்களும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது நோயாளியின் மீளுருவாக்க செயல்முறை தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடல் புதிய நுரையீரலை ஏற்றுக்கொள்ளும் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. […]
இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோயாளர்களின் சிகிச்சை உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் நோய் தடுப்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என தேசிய புற்றுநோயியல் நிறுவனத்தின் ஆலோசகரும் புற்றுநோய் வைத்திய நிபுணருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மறைந்த பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவு நிகழ்வில் உரையாற்றிய அவர் புற்றுநோய் என்பது இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய அளவிலும் அதிகரித்து வரும் சுகாதார […]
நாடு முழுவதும் மூளைக்காய்ச்சல் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 250 சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் உடல்நலக் குறைபாடுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் தொடர்பான நிலைமையை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேவையற்ற அச்சத்தில் ஆழ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். நோய்த்தொற்று தொடர்பான மேலதிக […]