Tag: Parliament News
Sri Lanka News, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தாம் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிடும்போது நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இங்கு இருப்பேன் என்று குறிப்பிட்டார். மேலும் தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஓஷல […]
Sri Lanka News,இலங்கையின் எதிர்கால சட்டங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், மக்கள் தொகை மாற்றங்களையும் நம்பகமான தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் இலங்கை பாராளுமன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம், கொள்கை வகுப்பில் மக்கள் தொகைத் தகவல்கள், சமூக ஆதாரங்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை முறையாகப் பயன்படுத்தும் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் வயோதிப மக்கள் தொகை […]
Sri Lanka News,கொழும்பு நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய திட்டமாக நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் செலவு மற்றும் அதைப் பயன்படுத்தக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டபோது அது பொருளாதார ரீதியில் சாத்தியமான திட்டமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நகரப் போக்குவரத்து […]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய புலனாய்வு தகவல்கள் முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவிடம் இருந்ததாகவும் அவற்றை வெளிக்கொணரவே தற்போது அவரது மடிக்கணனியின் இரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவினர் கோரி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தாலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தியாவுடன் செய்யப்பட்ட பாதுகாப்பு […]
சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் 40 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது அவசியமானதாக இருப்பதால் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நடைமுறை முதற்கட்டமாக ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தப்படுவதுடன் ஆறு மாதங்களுக்குப் […]