September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் நாடுகடத்தல் வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை போர்ட்ஸ்மவுத்தில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியது இங்கிலாந்து குடியேற்றச் சட்ட மாற்றங்களை கண்காணிக்க புதிய டாஷ்போர்டு குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் நாடுகடத்தல் வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை போர்ட்ஸ்மவுத்தில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியது இங்கிலாந்து குடியேற்றச் சட்ட மாற்றங்களை கண்காணிக்க புதிய டாஷ்போர்டு குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில்

Tag: Police Raid

பழமையான கல் பேரம் ஐவர் கைது

பழமையான கல் பேரம் தொடர்பாக புல்மோட்டையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ.20 மில்லியன் மதிப்புள்ள பழமையான கல் ஒன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கல்லை பேரம் பேசிக் கொண்டிருந்தபோது பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட […]

பொச்சு மட்டைக்குள் மணல் கடத்தல்

கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மணலை மறைத்து சட்டவிரோதமாக கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகன சாரதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போல் தோற்றமளித்த வாகனத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. வாகனத்தில் மணல் ஏற்றப்பட்டு அதன் மேல் பொச்சு மட்டைகள் பரப்பி மறைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக இந்த […]

மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (14) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் கமன்கெதர பகுதியில் வாலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 150 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேவேளை தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் கெரன்வத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 67.5 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 44 […]

கிண்ணியாவில் ‘ஐஸ்’ போதையுடன் இருவர் கைது

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பைசல்நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு அதிரடிச் சோதனை நடவடிக்கைகளின் போது 16 கிராம் 310 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் அதனை விற்பனை செய்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 105,310 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முச்சக்கரவண்டி ஓட்டுநரின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது அவரது மனைவி பயன்படுத்தும் வாசனைத் திரவியங்களுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் […]

பேஸ்புக் விருந்து 28 பேர் கைது.

அம்பலாங்கொடை பொனதுவ பகுதியில் நடத்தப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து ஒன்றில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 25 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகநபர்கள் பல்வேறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை நடவடிக்கையின் […]

பன்னிப்பிட்டியில் ஹெரோயின், ICE, குஷ் உடன் இருவர் கைது

கொழும்பு அருகிலுள்ள பன்னிப்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட விசேட போலீஸ் சோதனையின் போது, ஹெரோயின், “ICE” (கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமின்) மற்றும் “குஷ்” போன்ற போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீஸ் தகவலின்படி இந்த சோதனை நடவடிக்கை திட்டமிட்ட ரெய்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சுமார் 120 கிராம் ஹெரோயின் மற்றும் 248 கிராம் ICE போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் மேலும் 360 கிராம் அளவிலான குஷ் வகை போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய […]

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்ட 2252 கிலோ பீடி இலைகள் பறிமுதல் – ஒருவர் கைது

இலங்கையில் ஒருவர் கைது – 2252 கிலோ பீடி இலைகள் பறிமுதல். 2026.04.09 அன்று அதிகாலை பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவத்த பகுதியில் பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தீர்வைவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 2252 கிலோகிராம் பீடி இலைகளும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட 03 படகுகளும் உடன் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடையவர் ஆவார் அவர் […]

மினுவாங்கொட மற்றும் பாமுனுகம பகுதிகளில் கள்ளச்சாராயம் தொடர்பாக இருவர் கைது

இலங்கையில் சுற்றிவளைப்பு – 34 மற்றும் 58 வயதுடைய இருவர் அதிரடியாக கைது . 2026.04.03 அன்று காலை மினுவாங்கொட பொலிஸ் விசேட நடவடிக்கைப் படையினர் கொத்துகொட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 3830 லிட்டர் கோடா (24 பேரல்கள்) கள்ளச்சாராயத்துடன் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதே நாளில் மாலை பாமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் முத்துராஜவெல வகுருபீம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் […]