Tag: Sri Lanka Judiciary
BASL meeting, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் அதிகளவிலான சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை எதிர்கொள்ளும் முக்கியமான விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவதற்காக இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சட்ட அமைப்பு, சட்டத்தரணிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கவலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளது. சட்டத்துறையைச் சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். BASL meeting இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் […]
நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் நீதவான் பசன் அமரசேன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவதற்காக இன்று (11) கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் விசேட பொதுச் சபை கூட்டம் நடத்தப்படவிருந்த நிலையில் அந்தக் கூட்டம் தொடர்பாக உருவான சர்ச்சையே அவரது பதவி விலகலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனிடையே தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கும் வகையில் […]
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை தன்னிச்சையான முறையில் அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பான பொது கருத்தாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர் தற்போதைய விவாதம் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 அல்லது 70 ஆக உயர்த்துவது குறித்ததல்ல என்றும் […]
நாட்டின் நீதிக்கட்டமைப்பில் தற்போது சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதியை துரிதப்படுத்த மோதல் முகாமைத்துவ தீர்வு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இன்று (01) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றிய அவர் நாட்டில் உள்ள 333 நீதிமன்றங்களிலும் கீழ்நிலை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும் சில வழக்குகள் விசாரணை நிறைவடைய 10 […]
புஷ்பிகா டி சில்வா தொடர்பான கிரீடம் நீக்க சர்ச்சை வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கத் தயாராகியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மிஸ் ஸ்ரீலங்கா போட்டியின் போது ஏற்பட்ட கிரீடம் நீக்க சம்பவம் நிகழ்வின் நேரத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் பின்னர் சமூக ஊடக மற்றும் சட்ட தளங்களில் தொடர்ச்சியான விவாதமாக மாறியது.இந்த வழக்கு ஆரம்பத்தில் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட சர்ச்சையாக இருந்தாலும் பின்னர் […]
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை எதிர்த்து மூன்று மூத்த சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பாணை சட்டரீதியாக செல்லுபடியாகுமா என்பதையும், அது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் மனுதாரர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட நீதிபதியை மட்டுமல்லாது, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பிரிப்பு போன்ற முக்கிய விடயங்களையும் முன்னிறுத்தியுள்ளது. […]