யாழில் விபத்து இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சுட்டிபுரம் பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த சின்னராசா துளசிகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக பருத்தித்துறை ஆதார […]
