Tag: Tamil Heritage
திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் புத்த விகாரை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசின் முக்கிய பிரதிநிதிகளும் தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என திருகோணமலை மேல்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்த போதிலும் அந்த உத்தரவை மீறி புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் […]
தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிற்கு தென்மேற்கே அமைந்துள்ள டான் யாய் தாங் கிராமத்தில் உள்ள நெல்வயலில் கிடைத்த தொன்மையான பொருட்களைத் தொடர்ந்து அந்நாட்டு அரசின் தொல்லியல் துறையான Fine Arts Department தீவிர அகழாய்வை முன்னெடுத்தது. வரலாற்றுக்கு முந்தைய இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தத் […]
ஜூலை 5 ஆம் திகதி ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுவதுடன் ஒரு இனத்தின் வரலாறு அதன் தியாகங்களின் ஆழம் மற்றும் இலட்சியப் பற்றுறுதியின் அடிப்படையில் நினைவுகூரப்பட வேண்டியதென வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட நினைவு செய்தியில் ஒரு சமூகத்தின் வரலாற்றை வழக்கமான அளவுகோல்களால் மதிப்பிட முடியாது என்றும் சுதந்திரம், உரிமை மற்றும் இலட்சியங்களுக்காக தனிப்பட்ட வாழ்வையும் தாண்டி தன்னலமின்றி அர்ப்பணிக்கப்பட்ட தருணங்களே அந்த வரலாற்றின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதனின் இயல்பான உயிர்ப்பற்றுதலையே […]
தமிழர் பாரம்பரிய கலை மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் துர்க்கை அம்மன் கலா மன்றம் ஏற்பாடு செய்துள்ள “வரம் பெற்ற மைந்தன் காத்தவராயன்” சிந்துநடை கூத்து நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முள்ளிக்குளம் பண்ணாரி அம்மன் கோவில் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. தமிழர் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் சிந்துநடை கூத்து போன்ற பாரம்பரிய கலை வடிவங்களை மீண்டும் மக்கள் மத்தியில் உயிர்ப்பிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அண்ணாவியார் கலாபூஷணம் […]