புத்தூரில் கோர விபத்து மூன்று இளைஞர்கள் கவலைக்கிடம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (5) இரவு இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென வீதியைக் குறுக்காகக் கடந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மோதலின் தாக்கம் மிகுந்ததால் டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியின் மீது ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரின் கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் […]
