ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு நடந்த விபரீதம்
நுவரெலியா மாவட்டத்தின் அம்பேவெல பகுதியில் இன்று (19) காலை நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து தொடருந்து ஊழியர்களும் அதிகாரிகளும் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் காயமடைந்த சுற்றுலாப் பயணி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து மலையக தொடருந்து பாதையில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் […]
