Tag: Transport Sector
வெசாக் பண்டிகைக் காலத்தில் 92 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை ரூ.36 உயர்த்திவிட்டு தற்போது பொசன் பண்டிகையை முன்னிட்டு வெறும் ரூ.20 மட்டுமே குறைத்துள்ள அரசாங்கம் மக்களை ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபடுவதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இந்த சொற்ப விலைக்குறைப்பால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்பதால் தற்போதைய […]
ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்த நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ரயில் சேவைகள் வழக்கமான நேர அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில தொழிற்சங்க கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தினசரி ரயிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் மத்தியில் அச்சம் நிலவியது. குறிப்பாக அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற […]
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்தும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உடனடி கட்டண உயர்வுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து துறையில் செலவுகள் அதிகரித்தாலும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய பஸ் கட்டணமே தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் நாளாந்தம் பொதுப் […]