சஹாரா பாலைவனத்தில் துயரம் தாகத்தால் 49 பேர் உயிரிழப்பு
வடக்கு நைஜரில் அமைந்துள்ள சஹாரா பாலைவனப் பகுதியில் லொறி ஒன்று செயலிழந்ததால் ஏற்பட்ட துயரகரமான சம்பவத்தில் தண்ணீர் மற்றும் உணவின்றி சிக்கித் தவித்த குறைந்தது 49 பேர் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் அனைவரும் நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மாலி நாட்டில் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு தாய்நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மாலி மற்றும் அல்ஜீரியா எல்லைகளுக்கு அருகிலுள்ள அசமகா பகுதியிலிருந்து மேற்கே […]
