மாலத்தீவு கடலடிக் குகையில் உயிரிழந்த டைவர்களின் உடல்கள் மீட்பு – உலகையே அதிரவைத்த சோக விபத்து
மாலத்தீவின் வாவு அடோல் பகுதியில் உள்ள ஆழ்கடல் குகையை ஆய்வு செய்யச் சென்றபோது உயிரிழந்த ஐந்து இத்தாலிய டைவர்களில் இருவரின் உடல்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 60 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஆபத்தான கடலடிக் குகையில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பல நாட்களாக கடுமையான மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பின்லாந்தைச் சேர்ந்த சிறப்பு குகை டைவர்களின் உதவியுடன் உடல்கள் மேலே கொண்டு வரப்பட்டன. உயிரிழந்தவர்களில் ஜெனோவா பல்கலைக்கழக பேராசிரியரும் கடல் உயிரியல் […]
