விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள்
விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கியமான தீர்மானமாக எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் விவசாயம் உள்ளிட்ட தங்களது திறமைகளுக்கு ஏற்ற எந்தவொரு பல்கலைக்கழகப் படிப்பையும் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், இதற்கு முன்பு இந்த மாணவர்கள் கலை, மேலாண்மை, பௌதிக அறிவியல் […]
