வாய்ப்புற்றுநோயால் தினமும் 3 உயிரிழப்பு சுகாதார எச்சரிக்கை
Sri Lanka News,இலங்கையில் வாய்ப்புற்றுநோயால் தினமும் சராசரியாக மூவர் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனுஜா தக்ஷிணி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் ஆண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாக வாய்ப்புற்றுநோய் இருப்பதுடன் பெண்களிடையிலும் அதிகமாகக் காணப்படும் முதல் பத்து புற்றுநோய்களில் ஒன்றாக இது உள்ளதாக கூறினார். புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல், சிகரெட் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவை வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய […]
