புதுச்சேரி மக்கள் சந்திப்பு
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், புதுச்சேரி மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள்
சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. இதில் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்வது, மற்றும் அடுத்தகட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் பொதுக்கூட்டம்
கரூர் துயரச் சம்பவத்திற்கு 72 நாட்கள் கழித்து, புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தவெக பொதுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
விஜய் பிரச்சாரக் கூட்டம்
இதற்கிடையில், ஈரோட்டில் தவெக சார்பில் விஜய் பிரச்சாரக் கூட்டம் வருகிற 16 ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், இந்தக் கூட்டம் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும். இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை பனையூரில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வருகிற தேர்தலுக்கு முன்பாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தவெகவில் இருந்து எதிர்பார்க்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






























