நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள், தங்களது மில்லியன் கணக்கான கட்டுரைகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ஓபன்ஏஐ மற்றும் அதன் முக்கிய நிதி ஆதரவாளரான மைக்ரோசாஃப்ட்டை குற்றம்சாட்டியுள்ளன. இந்த வழக்கு முதலில் 2023ஆம் ஆண்டு தொடரப்பட்டது.
AI பயிற்சி மற்றும் பதிப்புரிமை விவகாரம்
செவ்வாய்க்கிழமை மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்க அரசு முதன்முறையாக தனது கருத்தைத் தெரிவித்தது. அரசின் அறிக்கை சட்டரீதியாக கட்டாயமானது அல்ல; எனினும், வழக்கை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அது ஆதரவாக அமையலாம்.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்காவின் முன்னணித் தன்மையைத் தக்கவைத்துக் கொள்வது முக்கியம் என அரசு தெரிவித்துள்ளது. AI பயிற்சியில் பதிப்புரிமைச் சட்டத்தின் ‘நியாயமான பயன்பாடு’ விதிகள் பொருந்தும் என்றும், இந்தப் பயன்பாடு புதிய மற்றும் மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதால் மிகவும் மாற்றத்தன்மை கொண்டது என்றும் அரசு வாதிட்டது.
ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், இசை நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், தங்களது படைப்புகளுக்கு இழப்பீடு வழங்காமல் AI நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்துவதாகக் கூறி பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. Trump administration OpenAI lawsuit உள்ளிட்ட வழக்குகளில், AI பயிற்சி நியாயமான பயன்பாடா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.


























