உக்ரைன், கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ஒரு போர்க்கப்பலையும், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இராணுவ சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்களையும் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக இன்று (25) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ரஷ்யாவின் கடற்படை மற்றும் போர் தளவாட விநியோகத்தை பாதிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் தகவலின்படி தாக்குதலில் இலக்காகக் கொண்ட கப்பல்கள் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் சில ஈரானில் இருந்து பெறப்பட்ட இராணுவ உபகரணங்கள் அல்லது தொடர்புடைய சரக்குகளை எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூற்றை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில் அண்மைய வாரங்களில் இரு தரப்பும் கடல் வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. கப்பல்கள் துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளவாட மையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பிராந்திய பாதுகாப்பு நிலைமை மேலும் பதற்றமடைந்துள்ளது.













Leave a Reply