கடுவலைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபத் தர்ஷண உள்ளிட்ட சிலர் இன்று (25) குற்றப்புலனாய்வு துறைக்கு சென்று முறையிட்டனர். அவர்கள் அளித்த புகாரில், தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்கிரமசிங்கவை படுகொலை செய்யுமாறு தூண்டும் வகையில் ஒரு சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவு அரசியல் நோக்கம் கொண்டதா, யார் இதை பரப்புகின்றனர், யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என்பன தொடர்பில் CID தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க, அரச நிதியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் தற்போது உடல்நலக் குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டு முன்னாள் ஜனாதிபதியையே குறிவைத்து இப்படிப்பட்ட பொதுவான கொலை மிரட்டல்கள் வெளிப்படையாக சமூக ஊடகங்களில் பரவுவது கடும் கவலைக்குரிய விடயமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
































