மோனிஷா திருமண வாழ்க்கை, பிரபல சின்னத்திரை நடிகை மோனிஷா தனது திருமண வாழ்க்கையில் எதிர்கொண்ட மன மற்றும் குடும்ப வன்முறைகள் குறித்து சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். சின்னத்தம்பி பூவே பூச்சூடவா நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள அவர் எட்டு ஆண்டுகள் நீடித்த திருமண வாழ்க்கை நம்பிக்கை துரோகத்தால் முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.
தனது கணவர் சந்தேகத்தின் பேரில் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதுடன் தனிப்பட்ட தருணங்களை அனுமதியின்றி பதிவு செய்து பிறரிடம் பகிர்ந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினார். மேலும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பு வாய்ப்புகளை ஏற்க விடாமல் தடுத்ததுடன் தனது வருமானத்தையும் தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் விவாகரத்து கோரியபோது, 100 சவரனுக்கும் அதிகமான நகைகளை விட்டுக்கொடுத்தே பிரிவை பெற்றதாகவும் நீதிமன்றத்தில் விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திட்ட தருணம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய விடுதலை உணர்வாக இருந்ததாகவும் மோனிஷா பகிர்ந்துள்ளார். அவரது இந்த அனுபவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.













Leave a Reply