கடந்த 12ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் சந்தோஷ் (24), தவசி (28) ஆகியோர் சேர்ந்து சிறுமியை ஒரு வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு
சிறுமியை மிரட்ட பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டுவதற்காக தவசியை காவல் குழுவினர் அழைத்துச் சென்றனர். அப்போது அரிவாளை எடுத்த தவசி, ஆய்வாளர் சுவர்ணவள்ளியை வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
எச்சரிக்கையை மீறி மற்ற காவல் அதிகாரிகளையும் தாக்க முயன்றதால், பாதுகாப்பு கருதி உதவி காவல் ஆய்வாளர் சிலம்பரசன் தவசியின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த தவசிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். காயமடைந்த ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Coimbatore police shooting சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






























