4.5 மீட்டர் உயரமுள்ள இந்த வேலியில் முள்கம்பிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்லை ஊடுருவல்களை விரைவாகக் கண்டறிந்து, தேவையான சூழலில் மக்கள் பின்லாந்துக்குள் நுழைவதைத் தடுக்க இது உதவும் என உள்துறை அமைச்சர் மாரி ரந்தானென் தெரிவித்தார்.
ரஷ்ய எல்லையில் தொடரும் பாதுகாப்பு எச்சரிக்கை
பின்லாந்து மற்றும் ரஷ்யா இடையே 1,340 கிலோமீட்டர் நில எல்லை உள்ளது. 2023 டிசம்பரில், விசா இல்லாத 1,300-க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் வந்ததைத் தொடர்ந்து, பின்லாந்து தனது அனைத்து நில எல்லை கடப்புப் பாதைகளையும் மூடியது. மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களை எல்லைக்கு அழைத்து வந்து நாட்டைச் சீர்குலைக்க மாஸ்கோ முயன்றதாக பின்லாந்து குற்றம்சாட்டியது. கிரெம்ளின் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.
தற்போது நிலைமை அமைதியாக இருந்தாலும் பதற்றம் நீடிப்பதாகவும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது என்றும் ரந்தானென் கூறினார். Nuijamaa எல்லைச் சாவடி அருகே நடைபெற்ற திறப்பு நிகழ்வில், சூழல் விரைவாக மாறக்கூடும் என்பதால் தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Finland Russia border fence பணியில் சுமார் 1,000 நில உரிமையாளர்களும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் பங்கேற்றதாக எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது. 2028 டிசம்பர் 31 வரை எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தை நீட்டிக்க அரசு விரும்புகிறது. அச்சட்டம், சில சூழல்களில் புகலிடக் கோருவோரைத் திருப்பி அனுப்ப அனுமதிக்கிறது. இது மனித உரிமை கடமைகளுக்கும் அரசியலமைப்புக்கும் முரணாக இருக்கலாம் என நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.































