அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், விழாவின் அமைப்பு மற்றும் நிர்வாக வடிவமைப்பை மறுபரிசீலனை செய்து வலுப்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சி பாதையை உருவாக்குவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
“இது பலருக்கும் விருப்பமில்லாத செய்தி என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்; ஆனால் நாங்களும் அதே உணர்வை பகிர்கிறோம்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, காலி இலக்கிய விழா இலங்கையின் முக்கியமான இலக்கிய மற்றும் கலாச்சார நிகழ்வாக இருந்து வருகிறது, இது உலகம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் சிந்தனையாளர்களை வரலாற்றுச் சிறப்புமிக்க காலி நகரத்துக்கு ஈர்த்துள்ளது.
ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்ததாவது, விழாவின் இலக்கு மாறவில்லை – கதைகள், சிந்தனைகள் மற்றும் படைப்பாற்றலின் பரிமாற்றத்தை கொண்டாடும் நிகழ்வாக 2027ஆம் ஆண்டில் புதிய உற்சாகத்துடனும் புதுமையான யோசனைகளுடனும் மீண்டும் நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.































