ஜெர்மனியின் இடம்பெயர்வு மற்றும் அகதிகளுக்கான கூட்டாட்சி அலுவலகம் (BAMF) நாட்டின் ஒருங்கிணைப்பு (Integration) படிப்புகளுக்கான புதிய சேர்க்கைகளை 2025 டிசம்பர் முதல் திடீரென இடைநிறுத்தியுள்ளதால், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரும் பாடநெறி வழங்குநர்களும் கடும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Correctiv வெளியிட்ட புலனாய்வு அறிக்கையின் படி இந்த முடக்கம் குறித்து பல கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முறையான தகவல் வழங்கப்படவில்லை. குடியிருப்புச் சட்டத்தின் பிரிவு 44(4) கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது BAMF இன் உள் மதிப்பாய்வில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் எப்போது இந்த செயல்முறை முடிவடையும் என்பதில் எந்தத் தெளிவும் இல்லை.

இதனால் ஜெர்மனியில் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மொழி மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சிகள் தாமதமாகி, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சமூக இணைப்பு போன்ற முக்கிய வாய்ப்புகளை புலம்பெயர்ந்தோர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வி நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading