துனிஸில் இருந்து நடத்தப்பட்ட Shams II நடவடிக்கை, ஜூன் 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 28 சிறப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர். ஐவரி கோஸ்ட், கானா, ஈராக், கென்யா, மலேசியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், கத்தார், தஜிகிஸ்தான், துனிசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இதில் இடம்பெற்றன.
முகப்படங்களை ஆய்வு செய்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு
ஜிஹாதி குழுக்கள் வெளியிட்ட காட்சிப் பதிவுகளில் இருந்து 108,076 முகப்படங்கள் சேகரிக்கப்பட்டன. தரவு சேகரிப்பு மற்றும் விசாரணையின் சில கட்டங்களை தானியக்கமாக்க செயற்கை நுண்ணறிவு முகவர்கள் மற்றும் மேம்பட்ட ஸ்கிரிப்ட்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரே படங்களை நீக்கவும், படங்களின் தரத்தைச் சரிபார்க்கவும் இந்த அமைப்பு உதவியது.
இன்டர்போலின் முகஅடையாள அமைப்பில் சமர்ப்பிப்பதற்கு முன், 6,362 தனித்துவமான உயர்தரப் படங்கள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர், செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய முடிவுகளைப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் பரிசோதித்து உறுதிப்படுத்தினர்.
Interpol AI operation தொடர்பான நடவடிக்கையில், பாக்தாத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகமும் கூடுதல் உளவுத் தரவுகளை வழங்கியது. மேலும் ஆயிரக்கணக்கான படங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதால், அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த மாதங்களில் அதிகரிக்கலாம். 126 பேரின் பெயர், தேசியம் அல்லது அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து இன்டர்போல் விவரம் வெளியிடவில்லை.





























