இந்த முன்மொழிவில் முதலில் கடல் போக்குவரத்து தடைகளை நீக்கி, பின்னர் அணு திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஈரான் பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் அணு ஆயுதம் பெறும் சாத்தியத்தை முற்றிலும் தடுக்க உறுதியான உடன்பாடு இல்லாமல் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அமெரிக்கா ஈரானின் அணு திட்டமே முக்கிய பிரச்சினை எனக் கருதி அதற்கு தீர்வு காணாமல் கடலிணையை திறப்பது அமெரிக்காவின் அழுத்தத்தை குறைக்காது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரான் தனது அணு திட்டம் அமைதியான நோக்கத்திற்கானது எனக் கூறி கட்டம் கட்டமாக நம்பிக்கையை உருவாக்கும் முயற்சியாக இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலைமை பிப்ரவரி 2026இல் தொடங்கிய மோதலின் பின்னணியில் உருவானது என்றும் இது உலக எரிசக்தி விநியோகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.


































