பிரிட்டனைச் சேர்ந்த Centre for Strategic Advantage (CSA) என்ற இலாப நோக்கற்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த மதிப்பீடு இடம்பெற்றுள்ளது. அனைத்து நாடுகளும் தற்போதைய உற்பத்தியைத் தொடரும் சூழலில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள யுரேனியத்தின் பங்கு, தற்போது சுமார் 25 சதவீதத்திலிருந்து 2040ஆம் ஆண்டில் 36 சதவீதமாக உயரலாம் என அறிக்கை கூறுகிறது.
ஆப்பிரிக்க சுரங்கத் திட்டங்கள் முக்கிய காரணம்
2024ஆம் ஆண்டில் உலகில் வெட்டியெடுக்கப்பட்ட யுரேனியத்தில் ரஷ்யாவின் நேரடி பங்கு 5 சதவீதமாக இருந்தது. ஆனால் வெளிநாடுகளில் ரஷ்யா கட்டுப்படுத்தும் சுரங்கங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், அந்தப் பங்கு சுமார் 25 சதவீதமாக இருந்தது.
நைஜர் நாட்டுடன் கடந்த ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தமும், தான்சானியா மற்றும் நமீபியாவில் சுரங்கங்களை மேம்படுத்தும் திட்டங்களும் Russia uranium control மேலும் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம். யுரேனியம் முக்கியமாக கசகஸ்தான், ஆஸ்திரேலியா, நமீபியா மற்றும் கனடாவில் வெட்டியெடுக்கப்படுகிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில் யுரேனிய விநியோகப் பற்றாக்குறை அதிகரிக்கலாம் என சுரங்கத் துறை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். குறைந்த விலைகள் காரணமாக பல சுரங்கங்கள் மூடப்பட்டதும், புதிய முதலீடுகள் குறைந்ததும் இந்தப் பற்றாக்குறைக்கு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
ரஷ்யாவின் ஆதிக்கம் மேற்கத்திய நாடுகளின் அணுசக்தி பாதுகாப்புக்கு சவாலாக இருக்கலாம். அமெரிக்கா ஏற்கனவே ரஷ்ய யுரேனிய இறக்குமதியைத் தடை செய்துள்ளது. இருப்பினும், சில விதிவிலக்குகள் மூலம் இறக்குமதி 2028ஆம் ஆண்டு வரை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.






























