கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் நீர் காகம் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் 24 நீர் காகங்கள் கொல்லப்பட்ட நிலையில், இறைச்சிக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சசிகுமாரிடம் இருந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
நீர் காகங்களை வேட்டையாடியதாக வழக்கு
கோனேரிப்பட்டி பேரேஜ் சாலை மற்றும் அதை ஒட்டிய காவிரி ஆற்றுப் பகுதிகளில் நீர் காகங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் ஒரு கும்பல் ரகசியமாக வலைவிரித்தும், விஷப் பொருட்களைப் பயன்படுத்தியும் தொடர்ந்து வேட்டையாடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வேட்டையாடப்பட்ட பறவைகளின் தோலை உரித்து இறைச்சியாக விற்பனை செய்ததாகவும் கூறினர்.
Salem cormorant meat sale உள்ளிட்ட காட்டுப் பறவை வேட்டை மற்றும் இறைச்சி விற்பனை கடுமையான குற்றம் என வனத்துறை எச்சரித்துள்ளது. சசிகுமார் மீது வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வேட்டை அல்லது இறைச்சி விற்பனை குறித்து தகவல் தெரிந்தால், அருகிலுள்ள வனத்துறை அல்லது உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
































