முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதிக கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள், மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.Sri Lanka News
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்க அபாயமும் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மரங்களின் கீழ் தங்குவதை தவிர்ப்பதுடன் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய நேரங்களில் மின்சாதனப் பயன்பாட்டிலும் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


























