Tag: Accountability
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் உண்மையைக் கண்டறிதல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளதற்கான மிகத் தெளிவான அடையாளமாக யாழ்ப்பாணத்தின் செம்மணி–சித்துபாத்தி மனிதப்புதைகுழி மாறியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது. “செம்மணி மனிதப்புதைகுழி நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் பல ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து உண்மையை அறிய காத்திருக்கும் குடும்பங்களின் சாட்சியங்கள் […]
Sri Lanka News,மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பவும் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த அனைத்து நிதியுதவிகளும் திறைசேரியின் பிரதி செயலாளர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும் விசேட கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிதி தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படும் திட்டங்களுக்கு […]
சமூக பாதுகாப்பு சீர்திருத்தம் தொடர்பாக இலங்கையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Employers’ Federation of Ceylon (EFC) நிறுவனம் அரசுக்கு விரிவான நிலைப்பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.இந்த ஆவணம் தொழில் அமைச்சரான அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் வழங்கப்பட்டது. மேலும் இது Preserving Beneficiary Interests in Sri Lanka’s Social Security Institutions Through Good Governance என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த முயற்சி ILO Bureau for Employers’ Activities (ACTEMP) மற்றும் International Training Centre […]
பொலிஸ் QR கருத்து தளம் என்ற புதிய டிஜிட்டல் அமைப்பை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் தங்கள் கருத்துகள், புகார்கள், பாராட்டுகள் மற்றும் பரிந்துரைகளை நேரடியாக வழங்கும் வகையில் இந்த QR குறியீடு அடிப்படையிலான ஆன்லைன் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து “Sri Lanka Police Community Feedback Portal” என்ற இணையதளத்திற்கு அணுக […]
முன்னாள் தென் மாகாண முதல்வர் ஷான் விஜயலால் டி சில்வா(Shan Wijayalal De Silva) அவர்களின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் ரூ.16.5 மில்லியன் அரச நிதி இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று CIABOC தெரிவித்துள்ளது. இந்த CIABOC அதிரடி கைது தொடர்பான விசாரணை அரச கொள்முதல் நடைமுறைகளில் ஏற்பட்டதாக கூறப்படும் விதிமுறை மீறல்களை மையமாகக் கொண்டு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை தகவலின்படி தென் மாகாணத்தில் தன்னார்வ அமைப்புகளுக்காக நாற்காலிகள் […]
பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய அவர் […]