Tag: Central Province
விடுமுறை, நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழையை முன்னிட்டு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் நாளை (04.08.2026) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதேவேளை ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய கல்வி வலயங்களில் தேவைக்கேற்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி […]
நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதால் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (04) முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (05) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் […]
இலங்கையின் ரயில்வே வரலாற்றில் அரிய நிகழ்வாக பல தசாப்தங்கள் பழமையான வரலாற்றுச் ரயில் என்ஜின் ஒன்று கண்டி மற்றும் பேராதனை இடையே ரயில் பாதையைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த அபூர்வ நடவடிக்கை ரயில் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.பொதுவாக ரயில் என்ஜின்கள் தண்டவாளங்களிலேயே நகர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை சிறப்பு கனரக போக்குவரத்து வாகனத்தின் உதவியுடன் சாலை வழியாக என்ஜின் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் போக்குவரத்து […]
கிராஸ் கன்ட்ரி வெற்றியாளர்கள் பட்டியலில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரசரா விஜேசூரிய ஆகியோர் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேசிய விளையாட்டு விழா 2026 இன் தொடக்கப் போட்டியாக நடைபெற்ற இந்த கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப்பில் இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த மொத்தம் 122 தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 77 ஆண் வீரர்களும் 45 பெண் வீராங்கனைகளும் […]
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழுநாடுமே ஒன்றாக” தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது. மலையக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் மக்களை இந்த அபாயத்திலிருந்து விடுவித்து அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும். […]