Tag: Constitutional Amendment
உயர் நீதிமன்ற, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தற்போது 63 ஆண்டுகளாக உள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதும் 65 ஆண்டுகளாக உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதும் […]
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளிலும் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தாமல் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீட்டிப்பதற்காக அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தத்தை அவசரமாக முன்னெடுத்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும் […]
இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆசியா-பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA கடும் கவலை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. LAWASIA வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாற்றமும் பரந்த அளவிலான ஆலோசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக […]
ஜனநாயகத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடியாக தலையிட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சேர் பெறுமதி வரி (VAT) திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய அவர் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்றும் தெரிவித்தார். மேல்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை கடந்த ஆறு […]