Tag: Constitutional Reform
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினன தகுண அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) அண்மையில் நடத்திய சமூகக் குறிகாட்டி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 64.1 சதவீதமானோர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகப் பரவலாக்கத்தின் முக்கிய அம்சம் என 67 சதவீதமானோர் கருதுவதாகவும் […]
அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பின்னர் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான சட்டங்களை நீதிமன்ற சவால்களுக்கு அப்பாற்பட்ட வகையில் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவாகும் முதலமைச்சர்களுக்கு தேவையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்து அதன் […]
இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆசியா-பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA கடும் கவலை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. LAWASIA வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாற்றமும் பரந்த அளவிலான ஆலோசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக […]
பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் புதிய அரசியலமைப்பு மக்களின் அங்கீகாரத்துடன் தற்போதைய ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போதைய அரசியலமைப்பு பல திருத்தங்களால் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் உறுதிப்பாட்டில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார். எனினும் நாட்டின் […]
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மையப்படுத்தி 1976ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் புதிய சர்வதேச அரசியல் செயல்முறை ஒன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி” (Tamil Political Framework Initiative) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் வரைவு ஆவணத்தை உருவாக்கி அதை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சமர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லண்டனில் […]