மேலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகப் பரவலாக்கத்தின் முக்கிய அம்சம் என 67 சதவீதமானோர் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைப்புரீதியான மாற்றங்களை முன்னிறுத்தியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த வாக்குறுதிகளை தாமதப்படுத்துவது மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளுக்கு எதிரான செயலாக அமையும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் உண்மையான ஜனநாயக மாற்றங்களுக்கு மாற்று அரசியல் பாதையை முன்வைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




























