Tag: NPP Government
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல மர்ம மரணங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் 323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்த டேன் பிரியசாதின் மரணம் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணையுடன் தொடர்புடைய முன்னாள் அதிகாரியின் உயிரிழப்பு மற்றும் 2.5 […]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினன தகுண அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) அண்மையில் நடத்திய சமூகக் குறிகாட்டி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 64.1 சதவீதமானோர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகப் பரவலாக்கத்தின் முக்கிய அம்சம் என 67 சதவீதமானோர் கருதுவதாகவும் […]
அரச நிதியை மோசடி செய்தவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் தங்களை தேசப்பற்றாளர்களாகக் காட்டிக் கொண்டு அரசாங்கம் பழிவாங்குவதாக குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் வழக்குகள் நெருங்கும் போது சிலர் கலக்கமடைந்து பாராளுமன்றத்தில் அரசியல் நாடகம் ஆடுவதாகவும் ஆனால் தாங்கள் ஏன் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டார். சிறந்த சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்று […]
ஜனநாயகத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடியாக தலையிட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சேர் பெறுமதி வரி (VAT) திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய அவர் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்றும் தெரிவித்தார். மேல்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை கடந்த ஆறு […]
பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் புதிய அரசியலமைப்பு மக்களின் அங்கீகாரத்துடன் தற்போதைய ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போதைய அரசியலமைப்பு பல திருத்தங்களால் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் உறுதிப்பாட்டில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார். எனினும் நாட்டின் […]