Tag: Crime Investigation
Karapitiya Body Found, காலி கராப்பிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் அழுகிய நிலையில் 58 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் திருமணம் செய்யாதவராகவும் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தவராகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கராப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வீட்டை சோதனை செய்தபோது குளியலறைக்குள் […]
Sri Lanka Shooting Incidents, இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 21 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 14 பேர் உயிரிழந்தும் 12 பேர் காயமடைந்தும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் மூன்று மணி நேர இடைவெளிக்குள் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன. வத்தளையில் நடைபெற்ற சிறுவர் பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் விசாரணையில் […]
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 28 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள வீட்டொன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களும் கிராம உத்தியோகத்தரும் காவல்துறைக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மானிப்பாய் காவல்துறையினர் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். இதன்போது 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். […]
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமாக ரீப்பீட்டர் வகை துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி எவ்வாறு அவரது வசம் வந்தது அது சட்டவிரோதமாகப் பெறப்பட்டதா மேலும் ஏதேனும் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
Africa News,ஜிம்பாப்வே தேசிய கால்பந்து அணியின் முன்னணி வீரர் டிவைன் லுங்கா தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப தகவல்களின் படி அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தென்னாப்பிரிக்க காவல்துறை தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை […]
பிரான்சில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை புகார்கள், பிரான்சில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 88,000 புகார்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களால் (Procureurs) மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சமீபத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சிறுமி லியானா (Lyhanna) வழக்கைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மீளாய்வின் நோக்கம் இதுவரை போதுமான அளவில் விசாரிக்கப்படாத அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் பரிசீலித்து தேவையான இடங்களில் விசாரணையை […]
வடக்கு ஜெர்மனியின் ஸ்டாடே (Stade) நகரில் இடம்பெற்ற அதிர்ச்சி தரும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.போலீசார் வெளியிட்ட தகவலின்படி சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற உடனேயே ஏராளமான போலீசார் மற்றும் அவசர மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். […]
யாழ்ப்பாணத்தின் அன்ரனிபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 220 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இன்று (07) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 102 பொதிகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகையின் சந்தை மதிப்பு சுமார் 3 கோடியே 60 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக […]
சுற்றுலா மோசடி தொடர்பான விசாரணையின் அடிப்படையில் பெந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுற்றுலா வழிகாட்டி ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) நிதி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து பெருமளவு பணம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைகளின்படி சுற்றுலா வர்த்தகத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக நம்பவைத்து ஜெர்மன் பிரஜையிடமிருந்து 91,860 யூரோக்கள் பெறப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் அந்த […]
19 துப்பாக்கிகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய சுற்றிவளைப்பு நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் குற்ற உலகிற்கு பெரும் பின்னடைவாக இது கருதப்படுகிறது. இந்த நடவடிக்கையில் 19 துப்பாக்கிகள் கணிசமான அளவிலான ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் மற்றும் சுமார் ஒரு இலட்சம் பிரெகபலின் (Pregabalin) மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில் பல்வேறு இடங்கள் ஒரே நேரத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது பறிமுதல் […]