பிரான்சில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை புகார்கள், பிரான்சில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 88,000 புகார்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களால் (Procureurs) மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சமீபத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சிறுமி லியானா (Lyhanna) வழக்கைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மீளாய்வின் நோக்கம் இதுவரை போதுமான அளவில் விசாரிக்கப்படாத அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் பரிசீலித்து தேவையான இடங்களில் விசாரணையை விரைவுபடுத்துவதாகும். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நீதித்துறை நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்வதும் இதன் முக்கிய இலக்காகும்.
அரசு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிப்பதில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் வகையில் அனைத்து வழக்குகளும் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.










Leave a Reply