2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வருமானத் தரத்தில் பின்னடைவைச் சந்தித்திருந்த இலங்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயர்-மத்திய வருமானம் பெறும் நாடு (Upper-Middle Income Economy) என்ற தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக உலக வங்கி தனது புதன்கிழமை (1) வெளியிட்டுள்ள சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நிதி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு திட்டங்களின் பலனாக இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் உற்பத்தித் துறை மற்றும் கைத்தொழில் துறைகளில் ஏற்பட்ட மீட்சியே நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த முன்னேற்றம் பொருளாதார மீட்புப் பாதையில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதற்கான முக்கிய சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.










Leave a Reply