Tag: Current Affairs
யாழ்ப்பாணத்தின் தையிட்டி விகாரை பகுதிக்கு சென்றிருந்த இரு தமிழ் இளைஞர்கள் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் விகாரைக்கு அருகாமையில் காணி உரிமையாளர்களின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்கு செல்வதாகக் கூறி அப்பகுதிக்குள் சென்றதுடன் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் அவர்களிடம் […]
இந்த ஆண்டுக்கான வேசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள 25வது “பௌத்தலோக வேசாக் வலயம்” தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தலோக வேசாக் குழு பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. மே 30 முதல் ஜூன் 1 வரை பௌத்தலோக மாவத்தையில் நடைபெறவுள்ள இந்த வேசாக் வலயம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் […]
சூறாவளி டிட்வா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து சேதமடைந்த பகுதிகளை மறுசீரமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு CEAT Sri Lanka நிறுவனத்தின் கெலனி கிளை இடைநிறுவன ஊழியர் சங்கம் ரூபா 11 இலட்சத்து 48 ஆயிரம் நிதியுதவியை வழங்கியுள்ளது. சங்க உறுப்பினர்களின் ஒருநாள் சம்பளமாக இந்த நிதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் பணிக்குழுத் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்திக்கு அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நிகழ்வில் சங்கச் செயலாளர் D.G.S.D. […]