September 8, 2026
Breaking News
ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை

Tag: Current Affairs

ஈஸ்டர் தாக்குதல் ரவி, ஷானிக்கு கடும் குற்றச்சாட்டுகள்

Easter Sunday attacks charges, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சணிவிரத்ன மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு ஈஸ்டர் […]

டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை என மேயர் எச்சரிக்கை

Toronto shootings, கனடாவின் டொராண்டோ நகரில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்பில் நகர மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டொராண்டோவில் யூதர்களுக்கு சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகமான X தளத்தில் கருத்து வெளியிட்ட மேயர் […]

தேர்தல் நிதி பேரிடர் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை பிரதமர் ஹரிணி விளக்கம்

Sri Lanka News,மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பவும் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த அனைத்து நிதியுதவிகளும் திறைசேரியின் பிரதி செயலாளர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும் விசேட கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிதி தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படும் திட்டங்களுக்கு […]

239 பேருந்து ஊழியர்கள் போதையில் சிக்கினர்

Sri Lanka News,மேல் மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையில் 239 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு நேர்மறையாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (NTMI) மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த விசேட சோதனை கடந்த சில வாரங்களாக மேல் மாகாணத்தின் பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களில் முன்னெடுக்கப்பட்டது. பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி […]

சிறைக்கலவரம் மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்

Sri Lanka News,அண்மையில் இடம்பெற்ற சிறை கலவர சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைச்சர் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலையை விசாரித்தார். சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் தேவையான மருத்துவ வசதிகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை வழங்கினார். விஜயத்தின் போது காயமடைந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன் அவர்களின் சிகிச்சை முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடமும் விரிவாகக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய […]

சுரேஷ் சல்லாய் விவகாரம் குற்றச்சாட்டு நிராகரிப்பு

சுரேஷ் சல்லாய் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் நிராகரித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) காவலில் இருந்த முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சல்லாய் மீது தவறான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் விளக்கத்தின்படி CID காவலில் இருந்த காலத்தில் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளும் மற்றும் மருத்துவ கவனிப்புகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை […]

மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அபிவிருத்தியா? பூநகரி கிராஞ்சியில் மாபெரும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் பாலாவி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும் பூர்வீக நிலங்களையும் பாதிக்கும் அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் மக்கள் போராட்டமும் முன்னெடுத்துள்ளனர். ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வேரவில் […]

சிகிச்சை செலவுக்கு மீதமான நிதி மாவீரர் குடும்பங்களுக்கு – சிவாஜிலிங்கம் அறிவிப்பு

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அவசர அறுவைச் சிகிச்சைக்காக மக்களிடம் உதவி கோரியிருந்த நிலையில் குறுகிய காலத்திற்குள் அவரது முதற்கட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்குத் தேவையான நிதி திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அறுவைச் சிகிச்சை முழுமையாக நிறைவடைந்த பின்னர் சிகிச்சைச் செலவுகளுக்குப் பின் எஞ்சும் நிதி […]

வீடொன்றின் குளியலறையில் இருந்து 11 வயது சிறுமி சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் அமைந்திருந்த தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த 11 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப தகவல்களின் படி சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிற்கு வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற நாளில் சிறுமியும் அவரது சகோதரனும் மட்டும் […]

அருச்சுனா எம்.பி.க்கு எதிரான வழக்கு ஜூன் 19ஆம் திகதி முக்கிய கட்டளை

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முக்கிய கட்டளைக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளது. தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியரைப் பற்றிய அவதூறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மேலும் சில வைத்தியர்கள் தனியார் ஊடகம் மற்றும் சில வலையொளி […]