Tag: Freedom of Expression
ஊடகவியலாளர் போராட்டம், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (31) ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டம் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் கௌசல்யா ஆரியரத்னவின் இருநாள் யாழ்ப்பாணப் பயணத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட […]
சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (18) கொழும்பில் இடம்பெற்ற இந்த விசாரணையில் எழுத்தாளர் தீபச்செல்வன் சார்பில் சட்டத்தரணி கலாநிதி விரஞ்சன ஹேரத் மற்றும் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோர் முன்னிலையாகினர். அதேவேளை எதிர்த்தரப்பினராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சு கலாசார அமைச்சு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் சார்பிலும் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். விசாரணையின் போது தமிழ் மக்களின் வரலாறு […]
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் பாடகர் சங்கீதன் விடுதலை செய்யக் கோரியும்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் […]
வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் புலிக்கொடி மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், குறித்த […]