Tag: Gampaha
Ragama Curfew, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடனடியாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வெளியாகும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அப்பகுதியில் […]
இலங்கையில் ஆண்டுதோறும் எச்.ஐ.வி. (HIV) தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக விசேட நிபுணர் வைத்தியர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் 2023 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தரவுகளை ஆய்வு செய்தபோது புதிய எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக அதிக மக்கள் தொகை […]
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக ஒழிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், முப்படைகள் மற்றும் பொலிஸாரை இணைத்த விசேட கூட்டுத் திட்டம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் காணப்படும் 23 வலயங்களை இலக்காகக் கொண்டு தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் விசேட சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மகரகம, […]
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,144 ஆக உயர்ந்துள்ளதுடன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி வரையில் மட்டும் 7,302 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். தென்மேற்கு பருவமழையுடன் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் வேகமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது 89 சுகாதார மருத்துவ அதிகாரி […]
இலங்கையில் 7 மாவட்டங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கலுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் அதிகமான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வழங்கிய தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4,617 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் கலுத்துறை மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த […]