Tag: Investigation
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உண்மையான குற்றவாளிகளை நோக்கிச் செல்லாமல் திசைதிருப்பப்படுகின்றன என ஜனநாயத்துக்கான இலங்கை சமூக ஊடகவியாளர்கள் அமைப்பின் ஆலோசகர் அதீத எதிரிசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் கடந்த காலத்தில் அதிகாரிகளிடம் இருந்தபோதிலும் அவற்றின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தார். குறிப்பாக தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பான தகவல்கள் […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எந்தவித அழுத்தங்களும் சவால்களும் வந்தாலும் அரசாங்கம் கைவிடப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டவல தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மீது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் ஒரு பகுதியாகவே இந்த […]
முன்னாள் தென் மாகாண முதல்வர் ஷான் விஜயலால் டி சில்வா(Shan Wijayalal De Silva) அவர்களின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் ரூ.16.5 மில்லியன் அரச நிதி இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று CIABOC தெரிவித்துள்ளது. இந்த CIABOC அதிரடி கைது தொடர்பான விசாரணை அரச கொள்முதல் நடைமுறைகளில் ஏற்பட்டதாக கூறப்படும் விதிமுறை மீறல்களை மையமாகக் கொண்டு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை தகவலின்படி தென் மாகாணத்தில் தன்னார்வ அமைப்புகளுக்காக நாற்காலிகள் […]
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் எவருக்கும் எதிர்ப்பு இல்லை என்றாலும் விசாரணை என்ற பெயரில் அநீதி அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணைகளே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் யுத்தம் […]
மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் நடவடிக்கைகளில் முறைகேடு இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் நிலையில் மற்றொரு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் நிர்வாக […]
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொழிலதிபரைத் தேடும் நடவடிக்கையின் போது முதலைகள் அதிகமாக உள்ள நதியில் இருந்து மனித உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது ஒரு போலீஸ் அதிகாரி ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றின் உதவியுடன் நதிக்குள் இறக்கப்பட்டு மிக அபாயகரமான சூழ்நிலையில் செயல்பட்டார். காணாமல் போன நபரை விழுங்கிய முதலை ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தாலும் அதனை அணுகுவது மிகவும் பதற்றமூட்டும் அனுபவமாக இருந்ததாக அதிகாரி தெரிவித்தார். பின்னர் சுமார் […]