குறிப்பாக தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்ததாகவும் அவை உரிய முறையில் கையாளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கத்தோலிக்க திருச்சபையின் சில தரப்பினர் ஊடகங்கள் வாயிலாக இந்த விவகாரத்தை திசைதிருப்ப முயலாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
உண்மை குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியவர்கள் தொடர்பில் முழுமையான வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாமல் தேவையான திருத்தங்களுடன் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.





























