Tag: National Security
Easter Sunday attacks charges, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சணிவிரத்ன மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு ஈஸ்டர் […]
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை கடமையை அலட்சியம் செய்தமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் […]
Sri Lanka Shooting Incidents, இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 21 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 14 பேர் உயிரிழந்தும் 12 பேர் காயமடைந்தும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் மூன்று மணி நேர இடைவெளிக்குள் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன. வத்தளையில் நடைபெற்ற சிறுவர் பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் விசாரணையில் […]
UK Iran Spy Case தொடர்பாக ஈரானுடன் தொடர்புடைய உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 39 வயதுடைய பிரிட்டிஷ் ஈரானிய நபர் ஒருவர் மீது இங்கிலாந்து அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். அந்த நபர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவியதாகவும் ஈரான் சார்பில் செயல்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கு […]
UK IRGC Ban 2026 தொடர்பாக பிரிட்டன் அரசு முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC)-க்கு ஆதரவு தெரிவிப்பது, அதன் நடவடிக்கைகளுக்கு உதவுவது அல்லது அதனைப் பாராட்டும் வகையில் செயல்படுவது குற்றமாக்கப்பட உள்ளது. இதற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood), தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய அதிகாரங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். […]
நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போலி கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சமீப காலங்களில் பெரும் கவனம் பெற்றுள்ள போலி ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு தப்பிச் செல்லல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. பொலிஸ் தகவல்களின்படி 41 வயதுடைய இந்த அதிகாரி ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை விவகாரப் பிரிவில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய ஒருவரை […]
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உண்மையான குற்றவாளிகளை நோக்கிச் செல்லாமல் திசைதிருப்பப்படுகின்றன என ஜனநாயத்துக்கான இலங்கை சமூக ஊடகவியாளர்கள் அமைப்பின் ஆலோசகர் அதீத எதிரிசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் கடந்த காலத்தில் அதிகாரிகளிடம் இருந்தபோதிலும் அவற்றின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தார். குறிப்பாக தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பான தகவல்கள் […]
கோத்தாபய ராஜபக்ச மனு தொடர்பாக இலங்கையின் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மீண்டும் கவனம் அதிகரித்துள்ளது. 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்யும் அபாயம் இருப்பதாக அவர் கூறுகிறார். இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் writ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரா, CID சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி […]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய புலனாய்வு தகவல்கள் முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவிடம் இருந்ததாகவும் அவற்றை வெளிக்கொணரவே தற்போது அவரது மடிக்கணனியின் இரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவினர் கோரி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தாலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தியாவுடன் செய்யப்பட்ட பாதுகாப்பு […]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே எந்தவொரு குற்றத்திலும் தொடர்பில்லாதவராக இருந்தால் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் பெப்ரவரி மாதம் முதல் தடுப்புக்காவலில் இருந்தபோதும் எந்த எதிர்ப்பும் எழாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி […]