மருமகன் தாக்கியதில் மாமா உயிரிழப்பு
கம்பளை கொலை, – கீரபனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கீரபனை பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான தகவலை அடுத்து கம்பளை காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. […]
