உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கைக்கு பாரிய பொருளாதார சுமை – நளிந்த ஜயதிஸ்ஸ
பூகோள யுத்தச் சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் சுமார் 70 சதவீதத்தால் உயர்ந்துள்ளதால் இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 521 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (02) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார். இந்த பாரிய பொருளாதார சுமையை திறைசேரியால் மட்டும் தாங்க […]
