Tag: Sri Lanka Farmers
Sri Lanka News,2025 யால பருவத்திற்கான அரசின் நெல் கொள்வனவு நடவடிக்கை ஜூலை 15 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.2024 ஆம் ஆண்டில் அரசு விவசாயிகளை அரசுக்கு நெல் விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டபோதும் அதற்கு குறைந்தளவிலேயே பதில் கிடைத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவைத் தொடங்கும் வரை விவசாயிகள் தங்களது அறுவடையை விற்பனை செய்யாமல் […]
மக்கள் தமது உரிமைகளுக்காகவும் தமது உற்பத்திக்காகவும் போராடும் நிலைமை தற்போது உருவாகியுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு விவசாய அமைச்சும் ஜனாதிபதியும் உடனடியாக தலையீடு செய்து தீர்வு வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் வருமானத்தை அதிகரிக்க வெற் (VAT) வரி உள்ளிட்ட வரி விதிப்புகள் அமுல்படுத்தப்பட்டாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் சுமைகளை எதிர்கொள்ளாத வகையில் அரசாங்கம் சுயாதீனமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் […]
யூரியா மோசடி தொடர்பான விசேட சுற்றிவளைப்பில் மாத்தறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) அதிகாரிகள் 179 யூரியா உரப் பைகளை பறிமுதல் செய்துள்ளனர். விவசாயிகளிடம் அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் முயற்சி குறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளின் தகவலின்படி 50 கிலோ எடையுடைய யூரியா உரப் பைகளின் விலை மற்றும் தயாரிப்பு விபரங்கள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டிருந்தன. இதன்மூலம் விவசாயிகளை தவறாக வழிநடத்தி கூடுதல் இலாபம் ஈட்ட முயற்சிக்கப்பட்டதாக […]
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு நெல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விவசாய ஒன்றியத்தின் செயலாளர் உபாலி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். உருளுவெவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் இருப்புகள் இன்னும் விவசாயிகளின் வீடுகளில் தேங்கிக் காணப்படுவதாக கூறினார். சந்தையில் ஒரு கிலோ நெல் 95 முதல் 100 ரூபாய் வரையிலேயே விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாகவும் […]
உரத்தட்டுப்பாடு மற்றும் நெல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகக் கலன்பிந்துணுவெவ, துடுவல, பரணகம, கெமுனு ஐக்கிய விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக நிலையான தீர்வுகளை வழங்கத் தவறினால் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கமாட்டோம் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சந்தையில் உர விநியோகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் ஒரு மூடை உரத்தின் விலை 9,000 ரூபாவிலிருந்து […]