அரசியல்
முன்மொழிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர். இந்தத் திருத்தம் ஒருகட்சி ஆட்சியை நிறுவும் நோக்கத்தைக் கொண்டதாகக் கூறினார்.
இந்த மசோதாவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஆணையைப் பெற்ற அரசாங்கம், தற்போது நீதித்துறையின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடிய அரசியலமைப்பு மாற்றங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
பல சட்ட மற்றும் தொழில்முறை அமைப்புகளும் முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து கவலை வெளியிட்டுள்ளதாக பிரேமதாச தெரிவித்தார்.
இந்த மாற்றங்கள் மக்களின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடும் என்பதால், நாடாளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், மக்கள் வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகாரம் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையே இலங்கையின் அரசியலமைப்பு முறையின் அடிப்படை எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு நிறுவனத்தின் சுதந்திரத்தையும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரித்தார்.
வேலையின்மை மற்றும் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவும் நிலையில், அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றங்களில் கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கே அரசாங்கம் மக்கள் ஆணையைப் பெற்றதாகக் கூறிய அவர். அடிப்படை உரிமைகளை விரிவுபடுத்தி மக்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
22வது திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
































