வெப்பத்துடன் அதிக ஈரப்பதமும் (Humidity) காணப்படுவதால் மக்கள் உணரும் வெப்பம் பதிவாகும் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெப்ப அலை காரணமாக ரயில் சேவைகள் சாலை போக்குவரத்து மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பநிலை 20°C க்கும் கீழ் குறையாமல் Tropical Night நிலை உருவாகக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். UK News
அதே நேரத்தில் ஐரோப்பாவின் பல நாடுகளும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் வெப்ப அலை தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் அதிகாரிகள் மக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்தவும் நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருக்காமல் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.


























